18 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும் போது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அட்டையை கோரும் உரிமை பொது மக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவாமுல்ல சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பொருட்கள் மீள வேண்டுமென்றால் 35 ஆயிரம் ரூபாயுடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸாரின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...