29 1
உலகம்செய்திகள்

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

Share

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இத்தாலியில் (Italy) வைத்து சந்தித்துள்ளனர்.

அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்ற, இருவரும் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.

காலிஸ்தானிய தீவிரவாத பிரச்சினைகளால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பின்னர், இரண்டு நாட்டு பிரதமர்களும் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில், முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பாக இந்த சந்திப்பு அமைந்ததாக கனேடிய பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற காலிஸ்தானிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ தெரிவித்ததை அடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...