24 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களை கையாள குழு ஒன்றை அமைத்த ரணில்

Share

சமூக ஊடகங்களை கையாள குழு ஒன்றை அமைத்த ரணில்

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) நியமித்துள்ளதாக கொழும்பின் (Colombo) ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனிக்கும் உச்ச அமைப்பாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardene) தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksha) இந்தக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...