24 666d2084e7bef
சினிமாசெய்திகள்

மகன் சூர்யாவை பல முறை அடித்த விஜய் சேதுபதி.. வெளிப்படையான பேச்சு

Share

மகன் சூர்யாவை பல முறை அடித்த விஜய் சேதுபதி.. வெளிப்படையான பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

இப்படத்தை இயக்குனர் நித்திலன் என்பவர் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை செய்துள்ளது.

மகாராஜா படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்தார் விஜய் சேதுபதி. பல இடங்களில் பேட்டி கொடுத்து வந்த விஜய் சேதுபதி, அதில் ஒரு பேட்டியில் தனது மகனை அடித்தது குறித்து பேசியுள்ளார்.

இதில் “அவர் எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன். சில நேரங்களில் அவரை திட்டி இருக்கிறேன். சில சமயங்களில் அடித்து இருக்கிறேன். அடித்ததும் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஒரு குழந்தைக்கு தான் செய்வது தவறு என தெரியாமல் அந்த தவற செய்கிறது. ஆனால், அது செய்வது தவறு என்பதை தெரிந்து நாம் அடிப்பது நம்மீது தானே தவறு. ஆனாலும் அந்த நேரத்தில் வரும் கோபம் காரணமாக அடித்து விடுகிறோம். பின் நம் குழந்தைகளை அணைகிறோம்” என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சூர்யா எனும் மகனும், ஸ்ரீஜா எனும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...