24 666d4e39c22a1
உலகம்செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

Share

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கினால் அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உக்ரைனிடம் நிபந்தனைகளையோ கோரிக்கைகளையோ புட்டினால் முன்வைக்க முடியாது என்றும் அவரால் தொடங்கப்பட்ட போரை அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...