32
உலகம்செய்திகள்

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

Share

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனைவி பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியானது வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர், நேற்று சட்டமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை கிருஷ்ண குமாரி ராய் ராஜினாமா செய்தார். இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

இவரது ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

அருணாசலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பீமா காண்டு பதவியேற்பு விழாவில் பிரேம் சிங் தமங் பங்கேற்க சென்ற நிலையில் அவரது மனைவி ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...