15 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

Share

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

இந்தியாவில் (India) 1990ஆம் ஆண்டு முதல் வசிப்பதாகக் கூறப்படும் இலங்கை அகதி ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து, அவரது மனுவை ஏற்று அல்லது நிராகரித்து உத்தரவை நிறைவேற்றுமாறு இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜேந்திரன் (Gajendiran) என்ற இந்த இலங்கை அகதி தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பத்தின் மீது 12 வாரங்களுக்குள், விண்ணப்பதாரரிடமிருந்து தேவையான அனைத்து விளக்கங்களையும் பெற்று, பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் (Anita Sumanth) உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தனது குடியுரிமை விண்ணப்பத்தை விரைவுபடுத்துமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் வசிக்கும் மனுதாரர், விழுப்புரத்தில் உள்ள கீழ் புதுப்பேட்டை மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த காலத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்,

இப்போது அவர் ஒன்பது வயது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்று மனுதாரரின் சட்டத்தரணி எல். ரோமியோ ராய் அல்ஃபிரட் மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய அரசின் மூத்த சட்டத்தரணி ஜி.பாபு, மனுதாரரின் விண்ணப்பத்தில் உள்ள முரண்பாடுகளை எடுத்துரைத்தார்.

மனுதாரர் தன்னை கஜேந்திரன் என்று கூறும்போது, தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையால் வழங்கப்பட்ட அகதிச் சான்றிதழில் அவர் ஆர்.கஜேந்திரகுமார் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இரண்டு தரப்பினரிதும் சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது பெயரில் உள்ள முரண்பாடுகள் உட்பட அனைத்து விளக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...