4 1
இலங்கைசெய்திகள்

அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு

Share

அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கோரி ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் எதிர்ப்பு

எவ்வாறாயினும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி.க்களுக்கு வரியில்லா உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...