3
இலங்கைசெய்திகள்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

Share

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கான சஜித்தின் தீர்மானம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போருக்குப் பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்த வேண்டும்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டம் தொடர்பான (Sajith Premadasa) உறுதிமொழியை அடுத்து, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் குழுக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chndrika Bnadarathunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஜே.வி.பியினரும் (JVP) 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே, இந்த திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரது, நிலைப்பாட்டை கட்டியெழுப்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 870x 696c94f879728
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்ப்பின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது – போர்க்கொடி தூக்கும் ஐரோப்பியத் தலைவர்கள்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க...

MediaFile 10
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற...

IMG 1275
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது அரசியல் அதிரடி: தம்புத்தேகமவில் மாணவர்களுக்குப் பெரும் இடையூறு!

தம்புத்தேகம நகரில் நேற்று (17) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் கூட்டத்தினால் ஏற்பட்ட...

198399 yjkrdilbjr 1707748418
செய்திகள்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க மீதான நிதி மோசடி வழக்கு: மன்றாடியார் நாயகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றபோது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...