24 66654b60a98e3
இலங்கைசெய்திகள்

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

Share

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

கொலன்னாவ நகரத்தை அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புதிய நகரத் திட்டத்தின் கீழ் உயரமான நிலங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதே பகுதியில் பொருத்தமான காணிகள் உள்ளதோடு, கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம் அனுமதியற்ற நிர்மாணங்களைத் தடுக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின்படி களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாரிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் கொலன்னாவ நகரம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொது இடங்களும் நீரில் மூழ்கியிருந்தன. இதனைத்தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...