24 665ec5ef0d595
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எதிரொலி: பங்குச்சந்தையில் சரிவு

Share

இந்திய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எதிரொலி: பங்குச்சந்தையில் சரிவு

இந்திய(India) மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முடிவுகளை கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திக்கு வர முடியாததால், பங்குச்சந்தையானது இந்த சரிவை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இன்று இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து, 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

மேலும், நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து, 22633.12யில் தடுமாறி வருகிறது. மேலும், சென்செக்ஸ் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...