24 665d5609afe14
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கப்போகும் கடன் உதவி

Share

இலங்கைக்கு கிடைக்கப்போகும் கடன் உதவி

இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.

அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது (Shehan Semasinghe) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைசச்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அனைத்து நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்றாவது கடன் தவணையாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள கடன் தொகை 330 மில்லியன் டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...