24 663080bb59c21
இலங்கைசெய்திகள்

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

Share

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், பொது மக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் லொறிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் டீசலின் விலை கடந்த இரண்டு விலை திருத்தங்களில் 46 ரூபாவால் குறைந்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 363 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மே 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 333 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை மேலும் 16 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி, புதிய விலை 317 ரூபாவாகும், கடந்த இரண்டு விலை திருத்தங்களிலும் டீசலின் விலை 46 ரூபாவால் குறைக்கப்பட்டதால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...