24 665aafb66c947
இலங்கைஉலகம்செய்திகள்

MasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி

Share

MasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி

MasterChef Australia போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை (Sri Lnka) வீராங்கனை சாவிந்திரி பெரேராவுக்கு (Savindri Perera) நடுவர்களால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் 2024 ஆம் ஆண்டு போட்டித் தொடரில் இணைவதற்கான வாய்ப்பைப் பெற்ற எட்டு போட்டியாளர்களில் சாவிந்திரி பெரேராவும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடுவர்கள் அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நேசித்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் மற்றும் இலங்கை யுவதி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்ததாகவும் நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

MasterChef Australia நடுவர்கள் சாவிந்திரி முந்தைய போட்டிகளில் அவர் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனது 18 ஃஅவது வயதில் அடிலெய்டுக்கு வரும் வரை இலங்கையின் கிராமிய சமையல் முறையும் மற்றும் காட்சிப்படுத்தலும் பாராட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் வரவிருக்கும் சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார்.

இந்த சுற்றுக்கு அவர் இலங்கை மதிய உணவை வழங்கியதுடன் அதில் பன்றி இறைச்சி கறி, மிளகாய் இறால், உருளைக்கிழங்கு பால் குழம்பு, வெங்காய இலை சம்பல் மற்றும் கத்திரிக்காய் உள்ளிட்ட பல வகையான உணவுகளை வழங்கியிருந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை உணவின் அனுபவத்தைப் பெற்றதற்காக போட்டியின் நடுவர்களும் அவரை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...