parli
செய்திகள்இலங்கை

விசேட பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது!

Share

இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான விசேட அமர்வான இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுகின்றது.

இதனால் இன்றைய தினம் முழு நாளும் வாய்மூல கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்விசேட அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...