24 66595c3ce5437
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ((IUCN) ) தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை மிகவும் அபாயகரமானதாக பட்டியலிட்டுள்ளது.

தமது முதல் உலகளாவிய மதிப்பீட்டில் இந்த விடயத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து. சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது என்று இந்திய மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் உலகெங்கிலும் உள்ள 36 புவியியல் பகுதிகளில் வெப்பமான மிதமான வடமேற்கு அத்திலாந்திக் பிராந்தியத்தைத் தவிர தென் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகள் மட்டுமே ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லுயிர் பாதுகாப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றிற்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமானவை.

எனினும், சதுப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகி வருகின்றன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...