24 66594a594cfbe
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

Share

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

ஈழத்தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயமே, இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு “முக்கிய தீர்வு” என்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல்( Wiley Nickel) தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று தீர்மானத்தை முன்வைத்த பின்னர் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தத் தீர்மானம் முக்கியமான முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை, தமிழ் சமூகத்தின் துன்புறுத்தல் மற்றும் சுயநிர்ணயத்தின் அவசியத்தைப் பற்றிய தமது குரலை அமெரிக்காவில் ஒலிக்கச் செய்வதற்கான மிக முக்கியமான முதல் படியாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த மற்ற ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களால் அனுசரணை செய்யப்பட்ட இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கையை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை உட்பட கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

இதற்காக தமிழர்கள் மத்தியில் சுதந்திரமான வாக்கெடுப்பையும் அது கோருகிறது. இந்த விடயம் தொடர்பாக தாம், கனடாவின் இரண்டு கட்சி குழுவுடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட நிக்கல், அவர்களின் முழு ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய படியாகும் என்று நிக்கல் கூறியுள்ளார். இதற்கான தரவுகள், ஆதாரங்கள் தெளிவாக உள்ளன, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது சுயசரிதையில் இலங்கையில் நடக்கும் வெளிப்படையான இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு இல்லாததை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு முக்கியமான முதல் பகுதி என்று தாம் நினைப்பதாக நிக்கல் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிக்கல் அந்த வாக்கெடுப்பு இலங்கையில் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...