24 6657d462f030d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வருவதாயின் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கின் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...