24 6657d462f030d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வருவதாயின் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கின் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...