24 665691ab08400
இலங்கைசெய்திகள்

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

Share

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை ஏற்கமுடியாதது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்று கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தீவிரமான அறிக்கை என்பதோடு மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று நலிந்த கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க ஒரு வாக்கெடுப்பை நடத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இதன் மூலம் எந்தவொரு தேர்தலிலும் ரணிலின் தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

எனவே, 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவது மக்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல என்பதை ஐக்கிய தேசியக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...