இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம்

Share
24 6654480d96c4a
Share

இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம்

தென்னிலங்கையில் வெளிநாட்டு பயணி ஒருவரின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அளுத்கம பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1.45 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் திருடப்பட்டுளு்ளது.

இது குறித்து தொடர்பில் அளுத்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி அமெரிக்க பிரஜையான ஆன்ட்ரூ கிறிஸ்டோபர் லூகாஸ் என்பவரின் பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று அதிகாலை 4:20 மணியளவில் ஹோட்டல் அறைக்குள் திருடர்கள் புகுந்துள்ளதை அமெரிக்க அவதானித்துள்ளார்.

அங்கிருந்தவர்களிடம் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அறையினை சோதனையிட்ட போது, 4,000 அமெரிக்க டொலர்கள், 210,000 இலங்கை ரூபாய்கள், அவரது கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...