24 664fb0cbe278c
உலகம்செய்திகள்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

Share

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான்(Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதோடு, அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் அதிக கடன்களை பெற்றுள்ளது.ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ‘பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்’ (PIA) நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனமான PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...