24 664e8d8c1df5a
உலகம்செய்திகள்

இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்

Share

இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்

அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இது அந்த நாட்டில் முதல் மனிதப் பாதிப்பு என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய குழந்தை முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திரும்பிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே, பறவைக் காய்ச்சல் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகிறது. பில்லியன் கணக்கான பண்ணை மற்றும் காட்டு பறவைகள் கொல்லப்பட காரணமாக அமைந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பாலூட்டி இனங்களுக்கும் பரவுகிறது.

இதனிடையே அவுஸ்திரேலிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர், மேலும் பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ளனர்.

பறவைக் காச்சலானது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக எளிதாக பரவாது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இதுவே முதல் பாதிப்பு என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய குழந்தை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டெக்சாஸ் மாகாணத்தில் கால்நடை மந்தைகளில் பறவைக் காச்சல் பாதிப்பு பெருகிவரும் நிலையில், பண்ணை ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...