24 664eeea7b337d
உலகம்செய்திகள்

பூமியையொத்த மற்றுமொரு கிரகம்: 1 வருடம் 17 மணிநேரம் மட்டுமே

Share

பூமியையொத்த மற்றுமொரு கிரகம்: 1 வருடம் 17 மணிநேரம் மட்டுமே

பூமியின் அளவோடு ஒத்து இருக்கும் அபூர்வமான கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ultra-cool நட்சத்திரத்தை சுற்றிவரும் exoplanet SPECULOOS-3 b என்கிற கிரகத்தை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகமானது பூமியின் அளவிலேயே உள்ளதால் காஸ்மிக் அளவில் (cosmic scales) பூமி மற்றும் இந்த கிரகத்தின் அளவு நெருக்கமாக உள்ளது.

இந்த கிரகமானது நட்சத்திர சுற்றுப்புறத்தில் அதிக கிரகங்களை கண்டுபிடிப்பதற்கான வளர்ந்து வரும் திறனை எடுத்துக்காட்டுவதோடு பூமியிலிருந்து சற்று வேறுப்பட்டும் காணப்படுகின்றது.

பூமி தன்னையும் சூரியனையும் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள் ஆகும். ஆனால், SPECULOOS-3 b கிரகம் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 17 மணி நேரம் மட்டுமே எடுக்கின்றது.

எனவே, SPECULOOS-3 b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 17 மணி நேரம் மட்டுமே ஆகும்.

மேலும், இந்த SPECULOOS-3 b கிரகமானது அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறப்படுவதோடு இதன் காரணமாக SPECULOOS-3 b அலை பூட்டப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

அதாவது, பகல்நேரம் என்று அழைக்கப்படும் கிரகத்தின் ஒரு பக்கம் தொடர்ந்து நட்சத்திரத்தை எதிர்கொள்வதால் நிரந்தரமாக பகல் வெளிச்சம் காணப்படுகிறது. இரவு பக்கமானது மூடப்பட்டிருக்கும்.

SPECULOOS (Search forhabitable Planets eclipsing ULtra-cOOl Stars) திட்டத்தால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதோடு ULtra-cOOl Stars -யை சுற்றி வாழக்கூடிய கிரகங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனை விட சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் பூமியின் அளவிலான கிரகங்களை கண்டறிவதை எளிதாக்குகிறது.

இந்த கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் உயிர்களை ஆதரிக்கும் திறனைப் புரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...