24 664e9a27da3c1
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

Share

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே கூடிய விரைவில் மின் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.

நீர் மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய காசல்ரீ, மாவுசாகலை, கொத்மலே, விக்டோரியா, ரன்தெனிகல, சமனலவெவ போன்ற நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை குறைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இரண்டு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மழையுடனான காலநிலையினால் ஏற்பட்டுள்ள நன்மையை பயன்படுத்தி மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு அமைச்சரிடம் கோருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...