24 664e5d6290cb6
உலகம்செய்திகள்

பிரித்தானியா பொதுத் தேர்தல் : அரச குடும்பம் முடிவு

Share

பிரித்தானியா பொதுத் தேர்தல் : அரச குடும்பம் முடிவு

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவது அல்லது திசை திருப்புவது போல் தோன்றலாம் என்ற காரணத்தாலையே அரண்மனை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்ய பிரித்தானியா எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தேர்தலுக்குச் செல்வதாக பிரதமர் ரிஷி அறிவித்தார்.

முன்னதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை சந்தித்துள்ள பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவால் எவரேனும் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், மன்னர் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...