24 664d92b5a28df
இலங்கைசெய்திகள்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

Share

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொது தேவைகளின் அடிப்படையில் 15,667 அதிகாரிகள் மற்றும் படையினர் இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி இராணுவத்தினர் வெளியேறியமைக்கான காரணம் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறான பொது தேவைகளின் அடிப்படையில் விலகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் கூட இவ்வளவு தொகையான இராணுவத்தினர் ஒரேயடியாக வெளியேறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் இராணுவத்தை விட்டு வெளியேறியமைக்கான காரணங்களை நிச்சயமாக ஆராய வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத இடைவெளியில் 373 இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும், பொருளாதார அழுத்தத்தினால் இந்நிலை நேரடியாக இலங்கை பாதுகாப்புத்துறையில் தாக்கத்தை செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...