24 664ccaea2ada6
இலங்கைசெய்திகள்

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

Share

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) என்ற அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பில் சேர விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) இதனை இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விரும்பும் சுமார் 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை தற்போது இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக 2024 இல் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பை ஏற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தனது ஆரம்ப உரையில், தமது அமைப்பின் உறுப்புரிமை ஐந்து நாடுகளில் இருந்து 10 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த உலகளாவிய முகாமில் சேர ஆர்வமாக உள்ளதாகவும், அதன் உறுப்புரிமமையை பெறுவதற்காக இந்தியாவை அணுக திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாட்டிற்குப் பின்னர் பாகிஸ்தான் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. இஸ்லாமாபாத் 2023 இன் பிற்பகுதியில் பிரிக்ஸின் உறுப்புரிமையை பெற விண்ணப்பித்துள்ளது.

அத்துடன் அதன் உறுப்பினர் முயற்சிக்கு ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவை நாடியுள்ளது.இலங்கையுடன், ஆப்கானிஸ்தான், அங்கோலா, கொமரோஸ், கொங்கோ, காபோன், கினியா-பிசாவ், லிபியா, மியான்மர், நிகரகுவா, தெற்கு சூடான், சூடான், சிரியா, துனிசியா, துருக்கி, சோமாலியா, உகண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளும் அரசுகளுக்கிடையேயான இந்த பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...