24 664c55dfaf493 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு சீன அரசாங்கம் வாய்ப்பு

Share

சீன அரசினால் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக முன்னெடுக்கப்படும் விசேட செயலமர்வில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி எம்.எஸ்.நளீம் (M.S. Naleem) பங்கேற்கவுள்ளார்.

குறித்த செயலமர்விற்காக அவர், இன்றைய தினம் (21.05.2024) சீனாவிற்கு (China) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

சீன தூதரகத்தின் பொருளாதார வணிக அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் இலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆளுகையில் அனுபவ பரிமாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வானது, சீனாவின் பீஜிங் (Beijing) நகரில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 21 பேரில் ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக எம்.எஸ்.நளீமே இடம்பெற்றுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கமையவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் தேர்வு மற்றும் வழிகாட்லுக்கமையவும் அக்கட்சியின் பிரதிநிதியாக நளீம், குறித்த செயலமர்வில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...