24 664c3f8f9b252
இலங்கைசெய்திகள்

டயானா கமகே பிணையில் விடுதலை

Share

டயானா கமகே பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இலங்கை பிரஜாவுரிமை இன்றி கடவுச்சீட்டு பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள டயானா கமகே, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...