24 664af123f2ab3
இலங்கைசெய்திகள்

தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்

Share

தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்

நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு நோய் எற்படும் அறிகுறிகள் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே வெசாக் பண்டிகைக்கு தானம் வழங்கப்படும் விகாரைகள் முதல் நாள் வரை பதிவு செய்யப்படும் எனவும் உபுல் ரோஹன (Upul Rohana) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானம் வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழையினால் 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center) தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...