24 664857ff3d04a
இலங்கைசெய்திகள்

தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கை சமூகம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்

Share

தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கை சமூகம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தொடர்பாக தென்னிலங்கை சமூகம், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று (18.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழ தேசத்தை தென்னிலங்கை பௌத்த பேரினவாதப் பூதம் இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமித்துக் கொண்ட கொடூரமான நினைவுகளை தமிழீழ தேசம் உணர்வுபூர்வமாக நினைவுகூரும் நாளே இன்றாகும்.

இந்த படுகொலை சம்பவத்தின் போது குறைந்தது 70,000 மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால், இன்றுவரை, அது குறித்த எந்தக் கரிசனையும் தென்னிலங்கை தேசத்திடம் இருந்து எழவில்லை.

தென்னிலங்கை சமூகத்தின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தோ அல்லது வலுமிக்க சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தோ தமிழின அழிப்புத் தொடர்பாக எந்தவித வருத்தமும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பெரும்பான்மையினம், தமிழர் தேசத்தின் இருப்பை ஏற்றுக் கொண்டு அதனை அங்கீகரிக்காமல் இனக் கபளீகரம் செய்ய முற்படுகிறது.

மேலும், அரசியல் தீர்வு என்று கபட நாடகம் ஆடிய வண்ணம் கட்டமைக்கப்பட்ட முறையில் இனவழிப்பைத் தொடர்கிறது.

எனவே, தமிழர் தேசம் தனக்கெனத் தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல அதற்குப் பிந்திய காலமும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுடன் நம் தேச விடுதலைக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்று உறுதி கொள்வோம்” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...