24 6647ef0a03a29
இலங்கைசெய்திகள்

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

Share

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

இறுதிப் போரிலே பல்லாயிரகணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா. சரவணா தெரிவித்துள்ளார்.

ஜெயா. சரவணாவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மே மாதம் 18 ஆம் திகதி எமது உரிமை போராட்டம் மௌனிக்கப்பட்ட கரி நாளாகும். வன்னி பெரு நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் நிறைவு பெற்றது.

இறுதி போரிலே பல்லாயிரகணக்கான மக்கள் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. இந்த துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.

இறுதிப்போர் காலத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் மரணத்தின் ஓலங்களாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த வீர மறவர்களையும் , இப்போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களையும் நினைவு கூரும் புனித நாளே இந்நாள் ஆகும்.

இந்நாளிலே எமது உரிமை போராட்டத்தில் உயிர் துறந்த மக்களின் உயிர் மூச்சு இன்றும் காற்றோடு கலந்து தமது உரிமை தாகத்தோடு எம் மூச்சுக்காற்றோடு கலந்துள்ளது.

தமிழர் ஐக்கிய முன்னணி சார்பாக விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களுக்கும், மக்களுக்கும் எமது வீர வணக்கத்தினை தெரிவித்துக் காெள்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...