24 6646e473c9fdd
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் அடிதடியில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் அடிதடியில் ஈடுபட்ட ராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதனை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஒப்புக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக தனது மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 14ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் துப்பாக்கி ஏந்தியவாறு விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரச அமைச்சரிடம் பயணச்சீட்டுடன் விமான நிலையத்திற்குள் நுழையுமாறு கூறியுள்ளனர்.

துப்பாக்கி ஏந்தியவர்களை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர பாதுகாப்பு அதிகாரிகளை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர விமான நிலைய வளாகத்திற்குள் பொருட்களை கொண்டு செல்லும் நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் மனைவி கொண்டு வந்த சில பயணப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் 700 ரூபாவை பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு வழங்கியிருந்த நிலையில், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக கசிந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தை ராஜாங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....