24 6646aef3a1f3c
இலங்கைசெய்திகள்

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

Share

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இருக்கும் இலங்கையர்களை விசாரிப்பதற்காக விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய – உக்ரைன் போருக்கு மத்தியில் இருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன.

சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டின் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்பது முக்கிய பிரச்சினையாகவுள்ளதுடன், அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி, ரஷ்யாவில் 600-800 க்கு இடையில் இலங்கையர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவில் போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றி தகவல் தெரிவித்த ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நன்றி. மேலும், இவர்கள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் பகுதிகள் குறித்த தகவல்கள் இல்லாததால் சில சிக்கல்கள் உள்ளன

ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்து சென்றுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முற்றிலும் மனித கடத்தல். இந்த கடத்தலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான நிலைமையை சுட்டிக்காட்டி ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர், அங்கு சென்றுள்ளவர்கள் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவே இருக்கும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...