24 664541cdc2f61
இலங்கைசெய்திகள்

சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை

Share

சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும், இந்தியாவின்(India) திட்டமான, அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை தொலைதூரப் பகுதிகள் உட்பட சுமார் 82 இலட்சம் அழைப்புகள் மற்றும் 19 இலட்சம் மருத்துவ அவசரநிலைகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த நோயாளர் காவு வண்டி சேவையில் இயங்கும் 322 வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஊழியர்கள் வெற்றிடங்கள் அல்லது பழுதுபார்ப்பதில் தாமதம் காரணமாக தற்போது இயங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில், இந்தியா வழங்கிய இலவச நோயாளர் காவு வண்டி சேவை, எட்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் அத்தியாவசியமான மருத்துவமனைகளுக்கு முன்னதான அவசர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் ஒரு பொது சுகாதார நிபுணரின், அண்மைய சமூக ஊடக இடுகையின் மூலம் இந்த வலையமைப்புக்கு முக்கியமான உந்துதல் ஆதரவு தேவைப்படுவது தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரான யசுனி மாணிக்ககே, நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 51 வயதுடைய நபரின் திடீர் மரணம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

“தாம் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்தபோதும், வாகனங்கள் எதுவும் அருகில் இல்லை

எனவே தமது இல்லத்தில் உள்ளவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்தநிலையில் சுவசேரியா 1990 சேவைக்கு நிதியளிப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதும் ஏன் இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை” என்று யசுனி மாணிக்ககே பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...