24 66454e83e48b1
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் மாணவியை கடத்த முயற்சித்த கும்பல்

Share

தென்னிலங்கையில் மாணவியை கடத்த முயற்சித்த கும்பல்

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்து வீடு திரும்பிய மாணவி ஒருவரை கடத்த முற்பட்டதாககூறப்படும் வான் மற்றும் நான்கு இளைஞர்களை ஆலதெனிய பொலிஸார்(கம்பஹா) கைது செய்துள்ளனர்.

பரீட்சையின் இறுதி வினாத்தாளுக்கு விடையளித்துவிட்டு நேற்று வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியே மேற்படி சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இதன்போது மாணவியுடன் இருந்த மேலும் இரு பாடசாலை மாணவர்கள் அதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது விரைந்து செயல்பட்ட ஆலதெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வானை துரத்திச் சென்று சந்தேக நபர்களையும் அவர்கள் வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ பகுதியிலுள்ள பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி – நாகஸ்தென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இரு மாணவிகளும் நண்பிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...