24 6641616f1ab6b
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

Share

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனை கொழும்பின் ஊடகம் ஒன்று தமது சிறப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தனது பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் இலக்கத்தை அவர் கேட்டதாகவும் புத்தளம் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

பிரதேசத்தில் வசிக்கும் குறிப்பிட்ட பொதுமகன் ஒருவரின் காணியை, அரசு கையகப்படுத்தியமைக்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்டவர், நட்டஈடு வழங்குவதற்கு எதிராக மனுவொன்று தமக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே விசாரணை முடியும் வரை நட்ட ஈட்டை நிறுத்தி வைக்குமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரதேச செயலாளர் நட்டஈடு பெற்றுக்கொண்டவரை அழைத்து, விசாரணை நடத்தியபோது, அவர், ஜனாதிபதி செயலக ஊடகப்பணிப்பாளர் என்று கூறிக்கொள்பவர், தம்மிடம் இழப்பீட்டு தொகையை குறைக்குமாறு வலியுறுத்துவதாக பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரதேச செயலாளர்களை இலஞ்சம் கேட்கும் கைப்பாவைகளாக பாவிக்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று பிரதேச செயலாளர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் வெளியானதை அடுத்தே இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகப் பணிப்பாளர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...