24 663dd7d6735fe
உலகம்செய்திகள்

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

Share

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

சுவிட்சர்லாந்துக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களுக்காக அரசு செய்யும் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆகவே, புகலிடக்கோரிக்கையாளர்களையும் வருத்தாமல், செலவையும் மிச்சம்பிடிக்கும் வகையில் சுவிஸ் அரசு சில திட்டங்களைத் தீட்டிவருகிறது.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செய்யப்படும் செலவு கைமீறிப்போகாமல் இருப்பதற்காக நேற்று சுவிஸ் அமைச்சர்கள் சில திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று, புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதன்மூலம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 54 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சம் பிடிக்கும் திட்டமாகும்.

மேலும், சுவிட்சர்லாந்தில் protection status S என்னும் பாதுகாப்பு நிலை பெற்றுள்ளவர்களை பணிக்கமர்த்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வருவாய் கிடைக்கும்.

மொத்தத்தில், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், 2028 வாக்கில் 650 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...