24 663dba6bbb1ba
உலகம்செய்திகள்

உக்ரேனிய ஜனாதிபதியைக் கொல்ல பாதுகாப்பு அதிகாரிகளே சதி: அம்பலமான பகீர் சம்பவம்

Share

உக்ரேனிய ஜனாதிபதியைக் கொல்ல பாதுகாப்பு அதிகாரிகளே சதி: அம்பலமான பகீர் சம்பவம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் இருவர் திட்டமிட்டதாக வெளியான தகவலை அடுத்து, அதன் தலைவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டமிடுவதாக உளவுத்துறை கண்டறிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான ஆணையில் Serhiy Rud என்பவரை நீக்குவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பொறுப்புக்கு இதுவரை எவரையும் அடையாளம் காணவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தரப்பு இந்த வாரம் ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த இருவரை கைது செய்துள்ளதுடன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உயரதிகாரிகளை படுகொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டினர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கான பரிசாக இந்த திட்டத்தை முன்னெடுக்க இருந்ததாகவும் விசாரணையில் அம்பலமானது.

மட்டுமின்றி, ரஷ்ய பாதுகாப்பு சேவையின் அதிகாரிகளே இந்த இருவரையும் ரகசியமாக களமிறக்கியுள்ளதாகவும், இவர்கள் முக்கிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு கசியவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெலென்ஸ்கியை கடத்திச் சென்று, அதன் பின்னர் கொல்லவும் இந்த இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த சதி திட்டம் எப்போது அம்பலமானது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே, உக்ரைன் தரப்பு அம்பலப்படுத்தியுள்ள இந்த சதி குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த 5 படுகொலை சதியில் இருந்து தாம் தப்பியுள்ளதாக கடந்த ஆண்டு ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான பாதுகாப்பு அதிகாரிகளையும் படுகொலை செய்ய அந்த குழு திட்டமிட்டிருந்ததாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...