24 66398181cea54
இலங்கைசெய்திகள்

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Share

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எயார் பெல்ஜியம் பணியாளர்களினால் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பயன்படுத்தப்படும் எயார் பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் ஶ்ரீலங்கன் விமானப் பணியாளர்கள் துன்பறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குத்தகைக்கு எடுக்கப்பட்ட எயார் பெல்ஜியம் நிறுவனத்தின் விமானங்களில் குறைந்தபட்சம் 4 பணியாளர்கள் அந்த விமான சேவையின் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பணியாற்றும் எயார் பெலஜியம் விமான சேவையின் பணியாளர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் இன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன விமானிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகளின் போதும் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளளர்கள் இலங்கை பயணிகளை இன ரீதியான அடிப்படையில் துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...