24 663919952d7d5
உலகம்செய்திகள்

கனடாவில் குடிபெயர உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Share

கனடாவில் குடிபெயர உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

கனடாவில் (Canada) ஒரு மாகாணத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்துக்கு குடிபெயர்பவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் (IELTS) எனப்படும் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) ஊடாக குடிபெயர்பவர்களுக்கு மாத்திரம் குறித்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், எக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry) மூலம் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் ஆங்கில பரீட்சைகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிரதேசத்திற்கு மக்கள் இடம்பெயர அனுமதிக்கும் வகையில் அந்த நாட்டு அரசாங்கத்தால் மாகாண நியமனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், அவர்கள் குடியேற விரும்பும் குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிரதேசத்தில் உள்ள வேலைவாய்ப்புக்களுக்கு தேவையான அனைத்து திறன்கள், பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுமைகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட பிரதேசம் அல்லது மாகாணம் உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரித்தவுடன், நீங்கள் அவர்களின் காலக்கெடுவிற்குள் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாகாண நியமனத் திட்டத்தின் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கில அல்லது பிரெஞ்சு மொழி புலமையைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது குறித்த சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது மாகாண நியமனத் திட்டத்தின் ஊடாக குடிபெயருபவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...