24 6637aa81e131d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த ஆண்டு முழுமையாக நீக்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகரிக்கும் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு (Sri Lanka) வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் முறைகேடுகள் காணப்படுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முறைகேடுகளை தவிர்க்கவும் வாகன இறக்குமதிக்கான தரங்களை மேம்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரச்சினைகளை நிவர்த்தி செய்ததன் பின்னர் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....