24 6637c743b7038
உலகம்செய்திகள்

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

Share

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைனின்(Ukraine) இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா(Russia) ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியு்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலில் கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்நிலையில் உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீழே விழுந்த ஆளில்லா விமானங்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...