24 663700d1d5c4d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

Share

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக, வாகனங்கள் உட்பட சுமார் 2000 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.

அதற்கமைய, வாகன இறக்குமதி தடை நீங்கினால் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சுமார் 750 மில்லியன் டொலர்களை வரியாக ஈட்ட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட போதும், ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

வாகன இறக்குமதியாளர்களின் தகவலுக்கமைய, தற்போது மிகவும் மதிப்புமிக்க வாகனம் மின்சார வாகனம் ஆகும். அதில் ஒன்று குறைந்தது 2 கோடி ரூபாயாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...