24 663700d1d5c4d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

Share

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக, வாகனங்கள் உட்பட சுமார் 2000 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.

அதற்கமைய, வாகன இறக்குமதி தடை நீங்கினால் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சுமார் 750 மில்லியன் டொலர்களை வரியாக ஈட்ட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட போதும், ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

வாகன இறக்குமதியாளர்களின் தகவலுக்கமைய, தற்போது மிகவும் மதிப்புமிக்க வாகனம் மின்சார வாகனம் ஆகும். அதில் ஒன்று குறைந்தது 2 கோடி ரூபாயாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...