24 6635f3d816468
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

Share

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(Gotabaya Rajapaksa) அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரத் தடை காரணமாக இருநூற்று நாற்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவிக்கையில்,

“இரசாயன உரங்களை தடைசெய்யும் தன்னிச்சையான தீர்மானத்தினால் கடந்த வருடம் நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் அந்த ஆண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் சாதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உயர் பருவத்தில் நெல் உற்பத்தி 11 இலட்சத்து முப்பதாயிரத்து நூற்று அறுபத்து நான்கு மெட்ரிக் தொன் (1,130,164) டன் ஒப்பிடுகையில் 36% குறைந்துள்ளது.

மேலும், நெல் உற்பத்தி 30% குறைந்துள்ளது. இரசாயன உரங்கள் மீதான தடையால் கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 47,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கீட்டின்படி, தேயிலை உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்ட நிதி இழப்பு ஆறாயிரத்து எண்பத்து நான்கு கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.

இறப்பர் ஏற்றுமதி 1.8%, தேங்காய் ஏற்றுமதி 5.9%, மசாலா ஏற்றுமதி 18.9% மற்றும் மரக்கறி ஏற்றுமதி 6.6% குறைந்துள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...