New Project 2
செய்திகள்இலங்கை

அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரையறை நீக்கம்!

Share

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரையறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுவதால் எதிர்வரும் 06 மாதங்களுக்கு தேவையற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாமெனவும் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் டொலருக்கான பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற 623 பொருட்களுக்கு எதிராகக் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் மத்திய வங்கியினால் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17487797691
சினிமாசெய்திகள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘கனா’,...

death
சினிமாசெய்திகள்

தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி...

WhatsApp Image 2025 06 01 at 17.50.09 683c46fc6b9bd
சினிமாசெய்திகள்

வெற்றி எனக்கென நினைத்தது இல்லை….!மனம் திறந்த காயத்திரி மற்றும் நசரின்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு...