24 6633db4ab12c0
உலகம்செய்திகள்

ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்

Share

ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்

தற்போது ஐபோன்களில் அலாரம் (Alarm) வேலை செய்யவில்லை என்று உலகத்தின் பல மூலையில் இருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு அலாரம் தொடர்பான புகார்கள் குவிவது இதுதான் முதல் முறை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, கடிகார செயலி வேலை செய்யவில்லை என்பதால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில் ஒலி எழுப்பவில்லை என்று பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணத்தினால் ஐபோன்கள் பயன்படுத்தும் பல பயனர்கள் தாமதமாக எழுந்து அலுவலகம் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் ஐ ஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகிவிடும் என்றும் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை அலாரம் ஏன் இயங்கவில்லை என்பதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...

17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6...

16 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பராமரிப்பு நிலையத்தில் சோகம்: குளத்தில் விழுந்து 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மெதமுலன, கதமடித்த பகுதியில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில், 18 மாதக் குழந்தை ஒன்று...