24 663449b35d120
இலங்கைசெய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

Share

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

அனுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.

கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...