24 663451b0740a3
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் கீழ் பொருளாதாரச் செயல்திறனுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது தொடர்பான தெளிவுக்காக இலங்கை அரசாங்கமும் இறையாண்மை பத்திரக்காரர்களும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இறையாண்மை பத்திரகாரர்களின் மார்ச் மாத முன்மொழிவு அதன் கடன் நிலையான கட்டமைப்பிற்கு இணங்கவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில், பத்திரதாரர்களுடனான முதல் சுற்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க அறிக்கையின்படி ஏப்ரலில் ஒரு புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புக்கு இணங்குகிறதா என்ற மதிப்பீட்டுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மாத்திரமன்றி, வழமையாகவே சர்வதேச நாணய நிதியம், பங்கு பத்திரக்காரர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமை காரணமாக அதன் கடன்நிலை தன்மை மதிப்பீடு தொடர்பில் தெளிவுகளை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

நாணய நிதியத்தை பொறுத்தவரையில் அது இலங்கை அரசாங்கத்;துடன் மாத்திரமே உடன்படிக்கைகளை எதிர்பார்க்கிறது.

எனவே, விரைவான முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் திருத்தப்பட்ட முன்மொழிவுகள் பரிமாறிக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...