24 663451b0740a3
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் கீழ் பொருளாதாரச் செயல்திறனுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது தொடர்பான தெளிவுக்காக இலங்கை அரசாங்கமும் இறையாண்மை பத்திரக்காரர்களும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இறையாண்மை பத்திரகாரர்களின் மார்ச் மாத முன்மொழிவு அதன் கடன் நிலையான கட்டமைப்பிற்கு இணங்கவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில், பத்திரதாரர்களுடனான முதல் சுற்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க அறிக்கையின்படி ஏப்ரலில் ஒரு புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புக்கு இணங்குகிறதா என்ற மதிப்பீட்டுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மாத்திரமன்றி, வழமையாகவே சர்வதேச நாணய நிதியம், பங்கு பத்திரக்காரர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமை காரணமாக அதன் கடன்நிலை தன்மை மதிப்பீடு தொடர்பில் தெளிவுகளை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

நாணய நிதியத்தை பொறுத்தவரையில் அது இலங்கை அரசாங்கத்;துடன் மாத்திரமே உடன்படிக்கைகளை எதிர்பார்க்கிறது.

எனவே, விரைவான முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் திருத்தப்பட்ட முன்மொழிவுகள் பரிமாறிக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...