24 662ec1c7d65f2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

Share

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதன் படி, இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பிரித்தானியாவிற்குள் ஆபத்தான முறையில் படகுகளின் மூலம் 7,167 க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலீஷ் கால்வாயை கடந்து குடியேறியுள்ளனர்.

அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு படகு மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் ரிசி சுனக், குடியேற விரும்புபவர்கள் அதிகமாக சட்டவிரோதமாகவே பிரித்தானியவிற்கு நுழைய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அறிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாகவிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...